புறக்கோட்டையில் ஹர்த்தால்

 
இலங்கை வர்த்தகத் தொழிற்சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள தொழில் ஒழுங்குமுறை பிரசாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று கொழும்பு, புறக்கோட்டையில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. 
 
புறக்கோட்டையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் மொத்த வியாபாரிகளும் அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்களும் தங்களது வர்த்தக நிலையங்கள் மூடி ஹர்த்தால் அனுஷ்ட்டித்துள்ளனர். 
 
மேலும், வர்த்தகத் தொழிற்சங்கத்தின் நடவடிக்கை காரணமாக தாம் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள மொத்த வியாபாரிகளும் உணவு இறக்குமதியாளர்களும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும்  கோரியுள்ளனர். 
 
வர்த்தகத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தொழில் ஒழுங்குமுறை முன்மொழிவை வர்த்தகத் தொழிற்சங்கம் கடந்த ஜனவரி இறுதியில் முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது. 
 
Tue, 02/05/2019 - 13:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை