வியாங்கொடையிலுள்ள களியாட்ட நிலையமொன்றில் ஊஞ்சல் உடைந்து விழுந்ததில், 13 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
மேற்படி களியாட்ட நிலையத்தில் நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் சியாம்பலப்பிட்டிய கொட்டுகொட பகுதியைச் சேர்ந்த டிஸ்னா ஜானகி கனேகொட எனும் மாணவியே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இம்மாணவி, கம்பஹா அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
Tue, 02/05/2019 - 13:41
from tkn