இம்மாதம் 15,16,17ஆம் திகதிகளில் அரியாலை சரஸ்வதி உள்ளக அரங்கில்
East Eagle Smashers (UK) நிறுவனம் மற்றும் எம்.எஸ்.ஆர் நிறுவனத்தினர் யாழ். மாவட்ட பெட்மின்டன் மன்றத்துடன் இணைந்து இரண்டாவது வருடமாகவும் ஏற்பாடு செய்துள்ள யாழ். மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கான பெட்மின்டன் சுற்றுப் போட்டி 2019 எதிர்வரும் 15, 16, 17 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய உள்ளக விளையாட்டரங்கில் இந்தப் போட்டிகள் நடைபெறும். விழாவின் இறுதி நாளன்று நடைபெறும் பரிசளிப்பு விழாவில் யாழ். மாநகர முதல்வர் ஆர்னோல்ட் இமானுவேல் பிரதம அதிதியாக கலந்து கொள்வார். உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளையின் தலைவர் தே. செந்தில்வேலவர் விழாவில் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பிக்கிறார். இந்த பெட்மின்டன் சுற்றுப் போட்டியானது கடந்த வருடமும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
வடமாகாணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பெட்மின்டன் விளையாட்டு வீரர்கள் இதில் பங்கெடுத்து இருந்தனர் இந்த வருடம் இது இரண்டாவது வருடமாக நடத்தப்படுகின்றது.
இந்த சுற்றுப் போட்டி பின்வரும் பிரிவுகளைக் கொண்டதாக நடத்தப்படும். 15 , 17, 20 ஆகிய வயதுக்குட்பட்ட பிரிவினர் இடையே ஆண் ,பெண் இருபாலாருக்குமான போட்டிகள் நடைபெறும். மற்றும் ஒரு பிரிவாக 40 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி போட்டியும், 40 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி போட்டியும், திறந்த வயதினருக்கான போட்டியும் ஆண் ,பெண் இருபாலாரும் ஒருங்கே விளையாடுகின்ற ஒரு போட்டியும் இங்கு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
from tkn