கரப்பந்தாட்ட போட்டியில் வாசனா பேகர்ஸ் அணி வெற்றி!

சுசரித அமைப்பும் இரத்தினபுரி மாவட்ட கரப்பந்தாட்ட அமைப்பும் இணைந்து முதற் தடவையாக ஏற்பாடு செய்திருருந்த கரப்பந்தாட்டப்போட்டி(19) எஹலியகொடை ஹிதுரங்கொட வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது

மேற்படி போட்டியில் வாசனா பேகர்ஸ் அணி வெற்றி பெற்றது.

இறுதி போட்டிக்கு தெரிவான வாசனா பேகர்ஸ் அணியும் இலங்கை மின்சார சபை அணியும் மோதியது. இதில் முதலாவது சுற்று போட்டியில் 26-24 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வாசனா பேகர்ஸ் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது சுற்று போட்டியில் 25-22 என்று புள்ளிகளின் அடிப்படையில் இலங்கை மின்சார சபை அணி வெற்றி பெற்றது.

இறுதி சுற்று போட்டியில் 25--23 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வாசனா பேகர்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சப்ரகமுவ மாகாண சபை தலைவரும் இலங்கை கரப்பந்தாட்ட சங்கத்தின் உப தலைவரும் இரத்தினபுரி மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் தலைவருமான காஞ்சன ஜயரத்ன வெற்றி பெற்ற அணிக்கு கிண்ணம் மற்றும் காசோலை வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜானக வக்கும்புர, சப்ரகமுவ மாகாண சபையின் முன்னால் உறுப்பினர்களான சிறிபால கிரியெல்ல, நிமால் விஜேநாயக்க, கே.எல்.ரத்நாயக்க மற்றும் எஹலியகொடை பிரதேச சபை தலைவர் திலக் ரோஹன ஆகியோர் கலந்து கொண்டனர்.

காவத்தை தினகரன் விசேட நிருபர்

Fri, 01/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை