புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் வீதி ஓட்டப்போட்டி

மன்னார்- புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் 2019 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியின் முதல் நிகழ்வான வீதி ஓட்டப்போட்டி (மரதன்) கடந்த வெள்ளிக்கிழமை (11) காலை 7 மணியளவில் புனித செபஸ்தியார் பேராலயத்திற் முன் ஆரம்பமானது.

பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி கில்டா சிங்கராயர் குறித்த வீதி ஓட்டப்போட்டியினை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு முன் ஆரம்பமான வீதி ஓட்டப்போட்டி பிரதான வீதியூடாக மன்னார் வைத்தியசாலை எழுத்தூரினை சென்றடைந்து.

அதனைத்தொடர்ந்து தலை மன்னார் 2ஆம் கட்டை பகுதியால் திரும்பி மன்னார் நகரப்பகுதிக்கு பஸார் பகுதியை சென்றடைந்து பொலிஸ் நிலைய வீதியூடாக சென்று மீண்டும் பாடசாலையை சென்றடைந்தது.

இதன் போது வீதி ஓட்டப் போட்டியில்,

1ஆம் இடம் ஜே.ஜெனிபர்-பியன் வெனு இல்லம், 2ஆம் இடம் ஜே. ஜெனி மோவிதா-ஜோசப் இல்லம் , 3ஆம் இடம் ஏ. அனுசியா-பியன் வெனு இல்லம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

மன்னார் குறூப் நிருபர்

Wed, 01/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை