பாராளுமன்றத் தேர்தலில் மூன்றாவது தடவையாகவும் மக்கள் ஆணையை வென்றுள்ள பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். பங்களாதேஷ் பிரதமர் ஷேக்ஹசீனாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நீண்ட நேரம் உரையாடியதுடன் மூன்றாவ து தடவையாகவும் வெற்றி பெற்ற ஷேக்ஹசீனாவி ன் சாதனையைப் பாராட்டினார். பிரதமர் ரணில் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்ததாவது:
பங்களாதேஷில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் அடுத்தடுத்து மூன்றாவது தடவையாகவும் உங்களுடைய கட்சி மக்கள் ஆணையை பெற்றுக் கொண்டுள்ளது.இதையிட்டு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். இலங்கைக்கும் பங்களாதேஷூக்கும் இடையிலான நட்பு மென்மேலும் பலம்பெற்று வரும் இச்சந்தர்ப்பத்தில் பங்களாதேஷின் புதிய பிரதமராக நீங்கள் மீண்டும் தெரிவானமை
எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பதவிக்காலம் மென்மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துவதாக வும் அவர் தெரிவித்துள்ளார்.
from tkn