நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்: இலங்கை வீரர்களுக்கு ஐசிசி அபராதம்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய இலங்கை வீரர்களுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

நியூசிலாந்து - இலங்கை இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 371 ஓட்டங்கள் பெற்றது. கப்தில் 139 ஓட்டங்கள் விளாசினார்.

பின்னர் 372 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. குசால் பெரேரா (102), திக்வெல்ல (76), குணதிலக (43) ஆகியோர் சிறப்பாக விளையாடிய போதிலும் இலங்கை 326 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்தது. இதனால் நியூசிலாந்து 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாடும் போது இலங்கை பந்து வீச்சாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. இதனால் போட்டிக்கான சம்பளத்தில் இருந்து இலங்கை வீரர்களுக்கு தலா 10 சதவிகிதமும், தலைவர் மலிங்கவிற்கு 20 சதவிகிதமும் அபராதம் விதித்தது ஐசிசி.

Sat, 01/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை