ஆயுதக் குழுவின் தாக்குதலில் மாலியில் 37 கிராமத்தினர் பலி

மத்திய மாலியின் கிராமம் ஒன்றில் வேட்டைக்காரர்கள் என்று நம்பப்படும் ஆயுதக் குழு ஒன்று நடத்திய தாக்குதலில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மத்திய மொப்டி பிராந்தியத்தின் கெளலெகோன் கிராமத்தில் பல வீடுகளும் தீமூட்டப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து அரசு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

டொகோன் வேட்டைக்காரர்கள் மற்றும் நாடோடி பூலா இனக்குழுவுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களில் கடந்த ஆண்டு நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நிலம் மற்றும் நீரை பயன்படுத்துவதிலேயே இந்த இரு குழுக்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.

கால்நடைகளுடன் கிராமத்தை விட்டு வெளியே இருந்தபோதே துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற செய்தி கிடைத்ததாக அந்த கிராமத்தைச் சேர்ந்த அல்யே யெட்டாரா என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

“சிறுமி உட்பட எனது குடும்ப உறுப்பினர்களுடன் கிராமத் தலைவர் மூசா டியாலோவும் கொல்லப்பட்டிருக்கிறார்” என்று அவர் குறிப்பிட்டார்.

Thu, 01/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை