நாளை (26) முற்பகல் 8.00 மணி முதல், கொழும்பை அண்டிய பிரதேசங்களில் 24 மணி நேர நீர்வெட்டு அமுலில் இருக்கும் என, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அத்தியாவசிய திருத்த வேலை காரணமாக குறித்த நீர்வெட்டு அவளில் இருக்கின்றன சபை மேலும் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிபிட்டிய, ஹோமாகம, ருக்மல்கம, பெலன்வத்த, மீபே, மத்தேகொட, பாதுக்கை ஆகிய பிரதேசங்களில் குறித்த நீர்வெட்டு அமலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
எனவே குறித்த பிரதேசத்தில் வாழும் பாவனையாளர்கள் தங்களுக்கு அவசியமான நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளுமாறு சபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
Fri, 01/25/2019 - 10:18
from tkn