பேருவளை ஹெரோயின்; கைதான மூவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

பேருவளையில் கைப்பற்றப்பட்ட 231.054 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பில் கைதான படகு உரிமையாளர் உட்பட மூவருக்கும் ஜனவரி 03 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்களை இன்றைய தினம் (20) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து நீதவான் இவ் உத்தரவை வழங்கினார்.

பேருவளை - பலபிட்டிய பிரதேச கடலில் படகொன்றில் வைத்து கடந்த டிசம்பர் 05 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் ஹெரோயினை கடத்திச் சென்ற பேருவளையைச் சேர்ந்த 28 மற்றும் 34 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 07 அம் திகதி குறித்த ஹெரோயினை கடத்திச் செல்வதற்கு பயன்படுத்திய ட்ரோலர் படகின் உரிமையாளர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Thu, 12/20/2018 - 15:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை