பிரேசில் தேவாலயத்திற்குள் துப்பாக்கிச் சூடு: ஐவர் பலி

பிரேசிலில் தென் பகுதியிலுள்ள சன் பவ்லோ நகரின் தேவாலயம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்தனர்.

தேவாலயத்தில் கடந்த செவ்வாய்கிழமை ஆராதனையின்போது கைத்துப்பாக்கியுடன் இருந்த நபர் ஆசனத்தில் இருந்து எழுந்து சரமாரியாக சுட ஆரம்பித்துள்ளார். தொடர்ந்து பொலிஸார் தம்மை கைது செய்வதற்கு முன்னர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த தாக்குதலுக்கான நோக்கம் உறுதி செய்யப்படவில்லை. துப்பாக்கிதாரி கணனி நிறுவனத்தில் பணி புரிந்து வந்ததாகவும் அவருக்கும் தீவிரவாதிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டை நேரில் கண்ட ஒருவர் கூறும்போது, “முதலில் அவருக்கு முன்னால் இருந்தவர்களை தாக்கினார். பின்னர் பலமுறை துப்பாக்கியால் சுட்டார். அவர் குறி பார்த்து எல்லாம் சுடவில்லை” என்றார்.

மேலும் இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக பொலிஸார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Thu, 12/13/2018 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை