மஹிந்த ராஜபக்ஷ சு.க பாராளுமன்ற உறுப்பினரென்று உறுதிசெய்யப்பட்ட கடிதமொன்று இன்று (20) சு.கட்சி பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாசவால் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்படுமென சு.கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிப்பதற்கு எவ்வித சட்டச்சிக்கலும் இல்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபாநாயகர் கரு ஜயசூரியவால் மஹிந்த ராஜபக்ஷ எதிர்க் கட்சி தலைவரென உத்தியோகபூர்வமாக ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.
Thu, 12/20/2018 - 06:00
from tkn