நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் மழைக்கான வளிமண்டல நிலை உருவாகி வருகிறது

- மேல் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகலில் அல்லது இரவில் மழை
- கிழக்கின் கரையோரங்களில் ஓரளவு

இன்றையதினம் (16) நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழைக்கு சாதகமான வளிமண்டல நிலை உருவாகி வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது

மேல், சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா, மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி, நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 75மி.மீ. வரையான ஓரளவான பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக் கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Thu, 03/16/2023 - 09:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை