காற்றழுத்த தாழ்வு நிலை திருகோணமலைக்கு அண்மையில்; பல பகுதிகளிலும் மழை

- சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை
- சில இடங்களில் 100 - 150 மி.மீ. வரை பலத்த மழை
- வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 கி.மீ.

தென்கிழக்கு மற்றும் அதனை அண்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை, திருகோணமலைக்கு 455 கி.மீ. தொலைவில் கிழக்கு திசைக்கு சார்பாக, 8.1°N, 85.3°E யில் மையம் கொண்டுள்ளது. இது இன்று (31) மாலை வரை படிப்படியாக மேற்கு நோக்கி, வடமேற்கு நோக்கி நகர்ந்து பின்னர் தென்மேற்கு திசையில் தெற்கு நோக்கி பயணித்து நாளை (பெப்ரவரி 01) முற்பகலில் இலங்கைக் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக, வதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்றையதினம் (31) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி.மீ அளவான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல், வடக்கு மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கிழக்கு, ஊவா, மேல், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு சுமார் 50-60 கி.மீ. வரை காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Tue, 01/31/2023 - 09:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை