பாகிஸ்தானில் பஸ் விபத்து; பாலத்திலிருந்து வீழ்ந்து தீப்பற்றியதில் 41 பேர் பலி

பாகிஸ்தானில் நேற்று இடம்பெற்றுள்ள வாகன விபத்தொன்றில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தானில் நேற்று பயணிகளை ஏற்றிச் சென்றுள்ள பஸ் வண்டியொன்று பாலம் ஒன்றில் மோதி பள்ளத்தில் வீழ்ந்து தீப்பற்றிக்கொண்டதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவிலிருந்து கராச்சிக்கு சுமார் 48 பேருடன் பயணித்த பஸ் வண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை,மீட்புப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் இதுவரை சிதைவுகளில் இருந்து 41 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் சில சடலங்கள் அடையாளம் காண முடியாத நிலையில் தீயில் கருகியுள்ளதாகவும் அப்பகுதி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Mon, 01/30/2023 - 10:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை