மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தின் 18, 16 வயதுடைய இருவர் பலி

வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (25) முற்பகல் கண்டி, அலவத்துகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துனுவில பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேட்டுடன் பாறை ஒன்று சரிந்து வீழ்ந்ததில், தாய், தந்தை, 3 பிள்ளைகள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆண் பிள்ளை (16) மற்றும் பெண் பிள்ளை (18) ஆகியோர் மரணமடைந்துள்ளனர்.

கண்டி - அக்குறணை - துன்வில பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் காயம் அடைந்த மற்றுமொரு மகள், மேலதிக சிகிச்சைக்காக பேராதனையை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் மழையுடனான வானிலை நீடிக்கும் நிலையில், பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sun, 12/25/2022 - 17:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை