பிரான்ஸ் அடுத்த சுற்றுக்கு தகுதி; ஆர்ஜன்டீனா வெற்றி

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பிரான்ஸ் முதல் அணியாக நொக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றதோடு சவூதி அரேபியாவிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்த ஆர்ஜன்டீனா மெக்சிகோவை விழ்த்தி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

லுசைலா அரங்கில் இலங்கை நேரப்படி நேற்று (27) அதிகாலை நடைபெற்ற போட்டியில் லியொனல் மெஸ்ஸி 64 ஆவது நிமிடத்திலும் பெர்னாண்டஸ் 87 ஆவது நிமிடத்திலும் கோல் புகுத்தியதன் மூலம் ஆர்ஜன்டீன அணி மெக்சிக்ேகாவை தோற்கடித்தது.

முன்னதாக டென்மார்க்கிற்கு எதிரான 2-1 என்ற கோல் கணக்கில வெற்றியீட்டிய நடப்புச் சம்பியன் பிரான்ஸ் 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறியது. இதன்போது கைலியன் ம்பப்பே பிரான்ஸ் அணிக்காக இரட்டை கோல் புகுத்தியமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சனிக்கிழமை நடந்த மேலும் இரு போட்டிகளில் சவூதி அரேபியாவை போலந்து அணி 2-0 எனவும் துனீசியாவை அவுஸ்திரேலியா 1-0 எனவும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டன.

Mon, 11/28/2022 - 09:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை