பாகிஸ்தானிடமிருந்து தலசீமியா நோய்க்கான மருந்துகள் நன்கொடை

பாகிஸ்தானின் பிரபல மருந்து நிறுவனமான 'ஹைனூன்' ஆய்வு கூடத்தினால் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்துவதற்கான மருந்துகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் இந்த மருந்துகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.

இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக இந்த மருந்துகள் கையளிக்கப்பட்டதோடு , இவ்வாறு 6 மாதங்களுக்கு ஒரு முறை இலங்கைக்குத் தேவையான மருந்துகளை இலவசமாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Mon, 11/28/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை