இலங்கையில் விரைவில் முன்னேற்றம் ஏற்படும்

ஜப்பானிய பிரதமர் ரணிலுக்கு வாழ்த்து

இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் விரைவான முன்னேற்றம் ஏற்படும் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. பிரதமர் ஃபுமியோ கிஷிடா இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியை பல வருடங்களாக முன்னெடுத்துச் சென்ற ரணில் விக்கிரமசிங்க இம்முறை ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளமை ஊக்கமளிப்பதாக ஜப்பானிய பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

நாட்டின் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படுவதையும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சு வார்த்தைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறை முன்னேற்றம் அடையும் என்றும் கிஷிடா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Mon, 08/08/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை