இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் தினேஷ்

நாட்டிற்கு வழங்கிய மனிதாபிமான உதவிகளுக்காக புதிய பிரதமர் தினேஷ் குணவர்தன இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு தமது நன்றியை தெரிவித்துள்ளார்.  இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தனது டுவிட்டரில் இதனை பதிவிட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த நட்புறவு மலர்ந்துள்ளதாக பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துக் கடிதத்திற்கு பதிலளித் பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவும், இலங்கையும் பல துறைகளில் பரஸ்பரம் பலனளிக்கும் கூட்டாண்மையாக பல ஆண்டுகளாக வளர்ச்சியடைந்துள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக பிரதமர் மோடி, கடந்த திங்களன்று இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு அனுப்பிய வாழ்த்து கடிதத்தில் வெளிப்படுத்தியிருந்தார். இலங்கை மக்களின் செழிப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிசெய்து, விரைவான பொருளாதார மீட்சி காணப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

Mon, 08/08/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை