துப்பாக்கி சூட்டில் இளைஞரொருவர் பலி

வத்தளையில் நேற்று சம்பவம்

வத்தளை - எலக்கந்த பகுதியில் நேற்று இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் அந்த இளைஞன் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக

பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்ட நபர் அங்கிருந்து தப்பிச்சென்றதையடுத்து சம்பவம் தொடர்பான புலன்விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Wed, 06/15/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை