பாதுகாப்பு மேம்பாடு குறித்து இந்தியா, வியட்நாம் இணக்கம்

இந்தியா மற்றும் வியட்நாம் இடையிலான பாதுகாப்பு நட்புறவை மேம்படுத்துவதற்கு வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் குயேன் பூ ட்ரொங்வும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இணக்கம் கண்டுள்ளனர்.

வியட்நாமுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் ஐம்பதாண்டு நிறைவையொட்டி இரு தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், தென் சீனக் கடற்பரப்பின் பாதுகாப்பு நிலைமை, சீனாவுடனான வியட்நாமின் கடல் சார் முரண்பாடு மற்றும் உக்ரைன் விவகாரம் போன்ற விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன. அந்த வகையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேலும் மேம்படுத்த இரு தலைவர்களும் இணக்கம் கண்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Wed, 04/27/2022 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை