கறுப்பின ஆடவரைக் கொன்ற மூவர் குற்றவாளிகளாக தீர்ப்பு

அமெரிக்காவில் உடற்பயிற்சிக்காக ஓடிக்கொண்டிருந்த கறுப்பின ஆடவர் ஒருவரை கொலை செய்த மூன்று வெள்ளை இனத்தவர்களும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த 2020 பெப்ரவரி 23 ஆம் திகதி 25 வயதான அஹமவுத் ஆர்பெரி என்பவர் ட்ரவிஸ் மற்றும் ஜோர்ஜ் மைக்கல் மற்றும் அவர்களின் அண்டை வீட்டாரான வில்லியம் ப்ரியான் ஆகியோருடன் மோதலில் ஈடுபட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தற்பாதுகாப்பிற்காக நடவடிக்கை எடுத்ததாக பிரதிவாதிகள் கூறிய நிலையில் இந்த சம்பவத்தில் இனவாதம் தாக்கம் செலுத்தி இருப்பதாக வழக்குத்தொடுநர்கள் வாதிட்டுள்ளனர்.

இந்நிலையில் குற்றங்காணப்பட்டிருக்கும் இந்த மூவரும் குறைந்தபட்சம் ஆயுள் தண்டனையை எதிர்கொண்டுள்ளனர்.

வெள்ளை இனத்தவர்களை பிரதானமாகக் கொண்ட 12 பேர் கொண்ட நடுவர் சபை சுமார் 10 மணி நேரம் ஆலோசனை நடத்திய பின் கடந்த புதன்கிழமை நண்பகல் இந்தத் தீர்ப்பை வழங்கினர்.

இந்தத் தீர்ப்புக்கு ஆதரவாக நீதிமன்றத்திற்கு வெளியில் திரண்ட கறுப்பின ஆதரவாளர்கள் கரகோசமிட்டனர்.

Fri, 11/26/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை