- கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்டவர்களுக்கு SMS
கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு அமைய, மேல் மாகாணத்தில் AstraZeneca தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றவர்களுக்கு அதன் இரண்டாம் டோஸ் வழங்கும் நடவடிக்கை இன்று (01) காலை முதல் இடம்பெற்று வருகின்றது.
இலங்கை இராணுவத்தால் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையின் அடிப்படையில், கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் 24 மணி நேர தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் (NOCPCO) அறிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் ஓகஸ்ட் 01 முதல் 06 வரை தடுப்பூசி வழங்கும் இடங்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது (கீழே இணைக்கப்பட்டுள்ளது) குறித்த இடங்களில் AstraZeneca இரண்டாம் டோஸ் தடுப்பூசியை பெறுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆயினும் கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள AstraZeneca தடுப்பூசி பெற்ற நபர்களுக்கு அவர்கள் பதிவு செய்த கையடக்கத் தொலைபேசிக்கு SMS ஊடாக உரிய நாள் மற்றும் திகதி தொடர்பான அறிவிப்பு அனுப்பும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறு தடுப்பூசி பெறுவதற்கு, தங்களது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் தேசிய அடையாள அட்டை மற்றும் ஏற்கனவே தடுப்பூசி வழங்கப்பட்டபோது வழங்கப்பட்ட தடுப்பூசி அட்டை ஆகியவற்றை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்காக தனியான வரிசைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் (NOCPCO) அறிவித்துள்ளது.
from tkn