நாட்டில் வெளவால்களுக்கு கொரோனா-வைரஸ் பரவல்

எல்பா, பீட்டா வைரஸ்கள் ஆய்வில் கண்டுபிடிப்பு

மனிதர்களுக்கு பரவும் எல்பா மற்றும் பீட்டா ஆகிய கொவிட்19 மாறுபாடுகள் கொண்ட இரண்டு வகை விசேட வெளவால்கள் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் ஜேர்மனியின் ரொபர்ட் கோக் நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு தொடர்பிலான ஆய்வறிக்கையை சர்வதேச vaccine சஞ்சிகையில் வெளியிட ஆராய்ச்சி குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

2017ஆம் ஆண்டு Identification of Emerging Eqents என்ற தலைப்பின் கீழ் இந்த பரிசோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள வெளவால்கள் மூலம் மனிதர்களுக்கு பரவக் கூடிய வைரஸ் தொடர்பில் இலங்கையில் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கொஸ்லந்தை பிரதேசத்திலமைந்துள்ள வெளவால் குகையை அடிப்படையாக கொண்டு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஆய்வுக்குழு உறுப்பினரான கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் ஜேர்மனியின் ரொபர்ட் கோக் நிறுவனத்தின் பேராசிரியரான தேஜானி பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வு நடவடிக்கை்காக 395 வெளவால்களின் மாதிரிகள் சேர்க்கப்பட்டுள்ளன. விலங்குகளின் மாதிரிகள் மற்றும் மலக்குடலிலிருந்து எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 33 வைரஸ் மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட எல்பா மற்றும் பீட்டா கொவிட்19 வைரஸ் மாறுபாடு தற்போது பல நாடுகளில் பரவும் பிரிட்டன் எல்பா அல்லது தென்னாப்பிரிக்காவின் பீட்டாவின் துணை வகைகள் அல்ல. ஆனால் இவை கொவிட்19 வைரஸின் நான்கு முதன்மை மாறுபாடுகளில் இரண்டாகும்.

எனினும் இந்த மாறுபாடுகள் மனிதர்களின் உடலில் பரவி கொவிட் 19 வைரஸ் வரை கொண்டு செல்லுமா? என்பது இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை. ஆனாலும் மக்கள் வௌவால்களுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்த வேண்டாமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

Sat, 06/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை