எக்ஸ்பிரஸ் கப்பலின் பிளாஸ்ரிக் பொருட்கள்

இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலிலிருந்து வெளியேறிய ஆபத்தான பொருட்களென சந்தேகிக்கப்படும் சில பிளாஸ்ரிக் பொருட்கள் நேற்று (10) காலை மன்னார் வங்காலை கடற்பரப்பில் கரை ஒதுங்கியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.  வங்காலை பொலிஸ் நிலைத்திற்கருகிலுள்ள கடற்பரப்பிலேயே மேற்படி சிறிய பிளாஸ்ரிக் உருண்டைகளென சந்தேகிக்கப்படும் பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச் சிறிய உருண்டைகள் கடற்கரையோரம் முழுவதிலும் சிதரிக் கிடப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளதுடன் இப் பகுதிக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் நேரடியாக சென்று கரை ஒதுங்கியுள்ள பிளாஸ்ரிக் பொருட்கள் தொடர்பாக பார்வையிட்டனர். மேலும் அரிப்பு பகுதியிலும் இப் பிளாஸ்ரிக் பொருட்கள் கரை ஒதுங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.

 

 

Fri, 06/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை