இன்று (25) அதிகாலை நாட்டின் பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட நிலையில், காலை 6.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், மன்னார், யாழ்ப்பாணம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 10 கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.
அத்துடன், கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 2 கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
Fri, 06/25/2021 - 13:04
from tkn