கடும் காற்றினால் பப்பாசிச் செய்கை பாதிப்பு

கடந்த சில நாட்களாக காற்றின் வேகம் அதிகரித்துள்ள நிலையில்,  புதன்கிழமை (26) வீசிய கடும் காற்றினால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கட்டைபறிச்சான், கடற்கரைச்சேனை போன்ற பகுதிகளில் நூற்றுக்கணக்கான பப்பாசி மரங்கள் காற்றினால் முறிந்து வீழ்ந்துள்ளதாக   தோட்ட உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் பப்பாசி செய்கையாளர்கள் பல இலட்சம் ரூபாய் நட்டத்தை  எதிர்நோக்கியுள்ளதாகவும், கடனைக்கூட அடைக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் அங்கலாய்க்கின்றனர்.

பாதிக்கப்பட்ட பப்பாசி செய்கையாளர்கள் தங்களுக்கான  இழப்பீட்டினை வழங்க  அரசு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

தோப்பூர் குறூப் நிருபர்

Fri, 05/28/2021 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை