எச்சரிக்கை வலயமாக மாறும் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணித்தியாலயங்களில் 97 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

அவர்களில் 5 சிறைக்கைதிகளும் அடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் தற்போது சிவப்பு வலயமாக காணப்படுவதனால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Thu, 05/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை