ஹய்பொரஸ்ட் தோட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தனியான ஓய்வறை

மலையக தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி  மலையகம் முழுவதும் சகல வசதிகளும் கொண்ட ஓய்வறை கட்டடங்கள்  நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஓய்வறை கட்டிடங்கள்  நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. பெருந்தோட்டங்களில் தொழிலில் ஈடுப்படும் போது இளைப்பாற, உணவு உட்கொள்ள, மலசலகூட  வசதிகளை கொண்ட  ஓய்வறை கட்டடங்கள் அமைக்கப்படவுள்ளன.   இதன் ஒரு அங்கமாக ஹய்பொரஸ்ட் முதலாம் பிரிவில் மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் மேற்பார்வையில் அமைக்கப்பட்டு வரும் ஓய்வறை கட்டடத்தை அமைச்சர் ஜீவன் தொண்டமான்  நேரில் சென்று  பார்வையிட்டார். 

இதன் போது முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிலிப்குமார், நுவரெலியா பிரதேச சபை தலைவர்  யோகராஜ், நுவரெலியா பிராந்திய மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள் உட்பட பலர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Thu, 04/08/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை