வீதியை அகலப்படுத்த கோரி வீதிமறியல் போராட்டம்

லுணுகல நகர வீதியை அகலப்படுத்தி புனரமைத்து தருமாறு பிரதேச மக்களும் முச்சக்கர வண்டி சாரதிகளும் வீதிமறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முற்பகல் 11மணி தொடக்கம் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் லுணுகல - பசறை வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலம் வரை தடைப்பட்டது.

நகரின் இருமருங்கிலும் வர்த்தக நிலையங்கள் காணப்படுவதோடு வாகனங்களை நிறுத்துவதற்கான போதிய இடப்பற்றாக்குறை நிலவுவதால் வீதியை அகலப்படுத்தி தருமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

லுணுகல நிருபர்

 

 

Mon, 04/05/2021 - 11:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை