இலங்கை வங்கி சேவையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கை வங்கி சேவையாளர் சங்கத்தின் பதுளை கிளையினர் நேற்று பதுளை பஸ் நிலையத்திற்கு முன்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓய்வூதியம் தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவுகளை அரசு அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கிக் கிளையினர், தமது மதிய நேர இடைவேளையின் போது, நண்பகல் 12.00மணி தொடக்கம் 1.00மணி வரையான காலப்பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தின் போது, 1996ஆம் ஆண்டு ஓய்வூதியம் தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவுகளை அரசு அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. சம்பளம் மற்றும் 3வருட பயிற்சி ஆகியவற்றிலுள்ள முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும். பிரதமர் வழங்கிய இலங்கை வங்கி தொடர்பாக வெளியிட்ட முன்னேற்றகரமான கருத்துக்கள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பதுளை தினகரன் விசேட நிருபர்

Thu, 04/08/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை