உயிர்த்த ஞாயிறு தாக்குல்; திரைப்படத்தின் கதை, திரைக்கதை வசன மறைகரம் கண்டறிய வேண்டும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராயும் ஆணைக்குழுவின் அறிக்கையை நாம் முழுமையாக நிராகரிக்கவில்லை. அதில் சாதகமான பல விடயங்கள் உள்ளபோதும்  இதன் பின்னணியிலிருக்கும் மறைகரம் குறித்து ஆராய வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி தெரிவித்தார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உயிர்த்த ஞாயிறு  திரைப்படத்தின் கதை, திரைக்கதை வசனத்தின் பின்னாலுள்ள மறைகரம் எது என்பதை அம்பலத்திக் கொள்ளவேண்டும். இந்தப் பிரச்சினையால் அனைத்து முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.சில ஊடகங்கள் பொய்ப்பிரசாரம் செய்து வதைகொத்து, வதை உள்ளாடை பற்றி பிரசாரம் செய்தன . அபு ஹிந்த் மற்றும் சாரா குறித்தும் ஆராய வேண்டும். ஆனால் பிரதான சூத்திரதாரியை கண்டு பிடித்துள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கதையின் தயாரிப்பாளர், திரைக்கதையாளர் மறைவாக இருக்கிறார்.இந்த அறிக்கையை முழுமையாக நிராகரிக்கவில்லை. பலவிடயங்கள் ஆழமாக ஆராயப்பட்டுள்ளன. அதனை மதிக்கிறேன். சாதகமான பல விடயங்கள் இருக்கின்றன என்றும் தெரிவித்தார். 

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிசாந்தன்

 

Thu, 04/08/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை