அதிகளவு நோயாளர் கண்டுபிடிக்கப்படும் பகுதிகள் முடக்கப்படலாம்

ஆயத்தமாக இருங்கள் - இராணுவத் தளபதி முன்னெச்சரிக்கை

பொதுமக்களை அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்து வைத்திருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ள இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, அதிகளவு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படும் பகுதிகள் முடக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.

பலநாட்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்துவைத்துக்கொண்டு தயாராகயிருப்பது சிறந்தது என தெரிவித்துள்ள இராணுவத்தளபதி, எனினும் எதிர்வரும் நாட்களில் கண்டுபிடிக்கப்படவுள்ள நோயாளிகளின் எண்ணிக்கையே இதனை தீர்மானிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். நாங்கள் மக்களை மிரட்டவேண்டிய அவசியமோ அல்லது உண்மையை மறைக்கவேண்டிய தேவையோ இல்லையென தெரிவித்துள்ள ஜெனரல் சவேந்திர சில்வா, கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் சிகிச்சை நிலையங்களை அதிகரிக்க இராணுவம் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Thu, 04/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை