பங்களாதேஷில் படகு விபத்தில் 26 பேர் பலி

பங்களாதேஷில் சுமார் 50 பேரை ஏற்றிய சிறிய படகு ஒன்று மற்றொரு படகுடன் மோதிய விபத்தில் 26 பேர் உயிரிழந்திருப்பதோடு காணாமல்போனோரை தேடி மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த படகு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சிட்டலக்சியா ஆற்றிலேயே மூழ்கியுள்ளது. நாட்டில் ஏழு நாள் முடக்கநிலை அறிவிக்கப்பட்டதை அடுத்து அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றியபடி இந்தப் படகு விரைவாக தனது பயணத்தை ஆரம்பித்திருந்ததாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் நீரில் தத்தளித்துக்கொண்டு உயிர் தப்பிய 11 பேர் மீட்கப்பட்ட நிலையில் பலர் நீந்தி கரையை அடைந்துள்ளனர்.

விபத்துக்கு பின்னர் சக்திவாய்ந்த சூறாவளி ஒன்று அந்தப் பகுதியை தாக்கியதால் மீட்பு நடவடிக்கையிலும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான நதிகளைக் கொண்ட பங்களாதேஷில் படகு மூலமான போக்குவரத்து பரவலாக இடம்பெற்று வரும் நிலையில் அங்கு படகு விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.

Tue, 04/06/2021 - 09:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை