புர்கினா பாசோ கிராமங்களில் தாக்குதல்: 15 பேர் உயிரிழப்பு

வடக்கு புர்கினா பாசோவில் பல கிராமங்களில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“ஆயுததாரிகள் கடந்த திங்கட்கிழமை நடத்திய கொலைகார தாக்குதலில் செய்டன்யாகா பகுதியில் பல கிராமங்களிலும் 15 பேர் கொல்லப்பட்டனர்” என்று பெயரை வெளியிடாத அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தள்ளார்.

ஆரம்பத்தில் யட்டகவு கிராத்தில் தாக்குதல் நடத்திய ஆயுததாரிகள் அங்கு 10 பேரை கொன்ற நிலையில் சொபொகலில் மேலும் ஐவர் கொல்லப்பட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் ஆண்களே அதிகம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்பு தரப்பினர் இந்த தாக்குதலை உறுதி செய்தபோதும் உயிரிழப்புகள் பற்றி குறிப்பிடவில்லை. அங்கு பாதுகாப்புக்கு துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். உலகின் மிக வறிய நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோ, 2015 இல் அண்டை நாடான மாலியில் இருந்து வந்த இஸ்லாமியவாத ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களால் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது.

Thu, 04/29/2021 - 13:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை