காணிச் சீர்திருத்த அலுவலகம் தொடர்ந்தும் யாழ். நகரிலேயே

அமைச்சர் டக்ளஸிடம் காணி அமைச்சர் உறுதி

காணிச் சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகம் யாழ்ப்பாணத்திலிருந்து இடமாற்றப்படாதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு காணி அமைச்சர் உறுதியளித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் கலந்துரையாடப்பட்டது. கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கான காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அலுவலகத்தை அநுராதபுரம்  மாவட்டத்துக்கு கொண்டு செல்வது பிரதேச மக்களுக்கு தேவையற்ற அசௌகரியங்களை ஏற்படுத்தும் என ஒருங்கிணைப்புக் குழுவில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் காணி அமைச்சருடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த அலுவலகம் மாற்றப்படுவதால் மக்களுக்கு ஏற்படக் கூடிய பிரச்சினைகள் தொடர்பாக தெளிவுபடுத்தினார்.

இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்களையும் மக்களின் உணர்வுகளையும் ஏற்றுக்கொண்ட காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, இக்காணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகம் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்திலேயே செயற்படுமென்று உறுதியளித்தார்.

 

Sat, 03/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை