வடக்கில் சுகாதார தொண்டர்கள் தொடர் போராட்டம் முன்னெடுப்பு

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக தொடர் போராட்டம் ஒன்றை நேற்று ஆரம்பித்துள்ளனர்.

நீண்ட காலமாக சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றும் தங்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை சுகாதார தொண்டர்களுக்காண நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற நிர்கதியாக நிற்கும் சுகாதார தொண்டர்களாகிய தங்களுக்கு உரிய தீர்வை வழங்குமாறு  பல தடவைகள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரியப்படுத்தியும் இதுவரையில் எந்தவதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் சுகாதார தொண்டர்கள் நியமனத்தில் அரசியல் தலையீடு வேண்டாம் என்றும் தமக்கு உண்மை நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் தமக்குரிய நியமனத்தை வழங்க வலியுறுத்தி போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர், ஐ.சிவசாந்தன்

 

Wed, 03/03/2021 - 12:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை