ஆட்டநிர்ணய சதி; சச்சித்ர சேனாநாயக்கவிடம் வாக்குமூலம்

ஆட்டநிர்ணய சதி; சச்சித்ர சேனாநாயக்கவிடம் வாக்குமூலம்-Sachitra Senanayake Appeared Before Police Special Investigation Unit

இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க, வாக்குமூலம் வழங்குவதற்காக, விளையாட்டு குற்றங்களை தடுக்கும் விசேட பொலிஸ் விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில், தன்னை கைது செய்வதை தடுக்கும் வகையில், சச்சித்ர சேனாநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட, முன் பிணை மனு நேற்றையதினம் (02) கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Wed, 03/03/2021 - 12:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை