செளபாக்கியா வேலை திட்டத்தில் கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் மகமாறு குள புனர்நிர்மாணப் பணி ஆரம்ப நிகழ்வு நேற்றுமுன்தினம் (17) கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மட் கனி தலைமையில் இடம் பெற்றது.
திருகோணமலை மாவட்ட பாராளுன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துக் கோரளவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்டச் செயலாளர் சமன் தர்ஷனா பாண்டி கோரலா, கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் கே.எம். நிஹார், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் பொது ஜன பெரமுன கட்சியின் மூதூர் தொகுதி அமைப்பாளர் நிமல் காமினி ஹேவா விதாரன, நீர்ப்பாசன பணிப்பாளர் ஏ.கே. அப்துல் ஜப்பார், நீர்ப்பாசன பொறியியலாளர் மற்றும் உயர் அதிகாரிகள், விவசாயிகள், விவசாய சங்கத்தினர் பிரதேச செயலக ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
திருமலை மாவட்ட விசேட நிருபர்
from tkn