கிண்ணியாவிலும் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய பரிந்துரை

மகமார் கிராமம்  முன்மொழிவு

கிண்ணியா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கான இடமாக கிண்ணியா மகமார் கிராமம் முன்மொழியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்ககளின் உடல்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டதனையடுத்து உடல்களை செய்வதற்கான இடங்கள் அடையாாளம் காணப்பட்டு நாடளாவிய ரீதியில் பரிந்துரைக்கப்பட்டுவரும் நிலையில் கிண்ணியாவில் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட மகமார் கிராம சேவகர் பிரிவின் மையவாடி ஒன்று அடக்கம் செய்வதற்கான இடமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு அது தொடர்பிலான அறிக்கையை வழங்கவுள்ளதாகவும் சுற்றறிக்கைக்கு அமைவாக குறித்த இடம் அமையும்போது அடக்கம் செய்வதற்கான இடமாக இது அடையாளப்படுத்தப்படவுள்ளதாகவும் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். ஹனி குறிப்பிட்டார்.

குறித்த இடத்துக்கு திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் றிஸ்வி, கிண்ணியா பிரதேச சபை தவிசாளர் கே.எம்.நிஹார், பிராந்திய சுற்றுச் சூழல் அதிகாரிகளும் பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளும் சென்றிருந்தனர்.

 

Tue, 03/09/2021 - 07:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை