அஸ்ட்ராசெனக்கா மருந்தின் பயன்பாடு மீண்டும் ஆரம்பம்

ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராசெனக்கா தடுப்பு மருந்து 'பாதுகாப்பு மற்றும் செயல்திறன்' கொண்டது என ஐரோப்பிய மருந்துகள் ஒழுங்குமுறை நிறுவனம் உறுதி அளித்ததை அடுத்து ஐரோப்பாவின் முன்னணி நாடுகள் அந்த மருந்தை மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.

இந்த மருந்தினால் இரத்தம் உறையும் அச்சம் காரணமாக 13 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மருந்தை பயன்டுத்துவதை இடைநிறுத்திய நிலையிலேயே ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் இது பற்றி மீளாய்வு செய்தது.

உயிராபத்துக் கொண்ட இரத்தம் உறையும் சம்பவங்களுடன் இந்த கொரோனா தடுப்பு மருந்துக்கு தொடர்பு இல்லை என்று இதன்போது கண்டறியப்பட்டது. இந்த தடுப்பூசியை பயன்படுத்துவது பற்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் தனிப்பட்ட நாடுகளே முடிவெடுக்க வேண்டி இருக்கும் நிலையில், இது பற்றி முடிவெடுக்க இன்னும் சில நாட்கள் எடுத்துக்கொள்வதாக சுவீடன் தெரிவித்தது.

இந்நிலையில் ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இந்த தடுப்பூசியை மீண்டும் மக்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியிலும் அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்த அந்நாட்டு அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன. ஆய்வு அறிக்கைகளின் முடிவுகளில் தடுப்பூசியால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்பது தெளிவாகியிருப்பதால், இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்ட்ராசெனக்கா தடுப்பு மருந்தை பயன்படுத்தும்படி உலக சுகாதார அமைப்பு நாடுகளைக் ஏற்கனவே கோட்டுக் கொண்டது.

Sat, 03/20/2021 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை