ஹக்கீம் - பாகிஸ்தான் பிரதி தூதுவர் சந்திப்பு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட் பெட்டிக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

நேற்று முன்தினம் இக் கலந்துரையாடல் கொழும்பிலுள்ள தூதுவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது. இச் சந்திப்பின் போது முக்கிய பல பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினார். மேலும் விரைவில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பிலும் இதன்போது உரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Thu, 02/11/2021 - 12:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை