நாட்டில் கொரோனாவுக்கு பலியான முதல் டாக்டர்

ராகம வைத்தியர் கராப்பிட்டியில் மரணம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 32 வயதான இளம் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலி, கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த வைத்தியர் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று (2) உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த வைத்தியர் 32 வயதுடைய, கயான் தன்தநாராயன என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ராகம வைத்தியசாலையில் கடமையாற்றிய நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தார். கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் உயிரிழந்த முதல் வைத்தியர் இவராவார். இதனை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் வாசன் ரட்ணசிங்கம் உறுதிப்படுத்தியுள்ளார்.

 

 

Wed, 02/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை