காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் சுழற்சிமுறையில் உண்ணாவிரதம்

கிளிநொச்சி முருகன் கோவிலுக்கு முன்பாக ஆரம்பம்

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சுழற்சிமுறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி யில் ஆரம்பமாகியுள்ளது.

கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலயம் முன்பாக நேற்று முற்பகல்11 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் கவன ஈர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து போராட்ட பந்தல் அமைக்கப்பட்ட இடத்தில் அறவழி போராட்டத்தை அவர்கள் ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டம்.06ஆம் திகதிவரை நடத்தப்படவுள்ளது.

நேற்று ஆரம்பமான போராட்டத்தில் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்ட காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது தமது பிள்ளைகளை விடுதலை செய்ய வேண்டுமென உறவுகள் வலியுறுத்தியதுடன், சர்வதேசம் நீதியை பெற்றுத்தர வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

பரந்தன் குறூப், கிளிநொச்சி குறூப் நிருபர்கள்

Wed, 02/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை