யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று ஆரம்பம்

இன்றும் நடைபெறும்

யாழ். பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நேற்றுக் காலை ஆரம்பமாகியது. நேற்றும், இன்றும், 06 அமர்வுகளாக நடைபெறவுள்ள இப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வில் யாழ்.பல்கலைக்கழகவேந்தர் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமை தாங்கி பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, வவுனியா வளாக முதல்வர் கலாநிதி ரி. மங்களேஸ்வரன், பதிவாளர் வி. காண்டீபன், நிதியாளர் எஸ்.சுரேஷ்குமார், நூலகர் சி. கல்பனா மற்றும் பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கொவிட் 19 நிலைமைகளைக் கருத்திற் கொண்டு இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் இப் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

Thu, 02/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை