பஸ் சாரதியாக மாறிய சந்திரகாந்தன் எம்.பி

சீரற்ற பாதையில் செலுத்திச் சென்றார்

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மாவட்டவான் எனும் இடத்தில்  அணைக்கட்டு கட்டுவதற்கான கல் வைக்கும் நிகழ்வுக்கு சென்றுகொண்டிருக்கும் போது வீதியில் பயணிகளுடன் பஸ்சொன்று நிறுத்தப்பட்டிருந்ததை அவதானித்துள்ளார். தனது வாகனத்தை நிறுத்தி நடந்த விடயத்தை கேட்டறிந்தார்.

பஸ் சாரதி வீதி மிக மோசமாக உள்ளதால் செல்ல முடியவில்லை. பஸ்ஸில் இருப்பவர்கள் அரச ஊழியர்கள் அவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டும், என்ன செய்வதென்று தெரியவில்லையென்று கூறியுள்ளார். “உங்களைப் பாதுகாப்பாக நான் உரிய இடத்துக்குக் கொண்டு செல்கிறேன்” என்று கூறிவிட்டு பஸ் சாரதியாக மாறி அவர்களை உரிய இடத்துக்கு கொண்டு சேர்த்துள்ளார்.

Thu, 02/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை