அரசியல் குற்றச்சாட்டுள்ள கைதிகளென எவரும் சிறைச்சாலைகளில் இல்லை

சாணக்கியனின் கேள்விக்கு பிரதமர் பதில்

அரசியல் குற்றச்சாட்டுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளென இலங்கையின் சிறைச்சாலைகளில் தற்போது எவரும் இல்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது, அரசியல் கைதிகள் தொடர்பாக தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்போது பதிலளித்த பிரதமர் மேலும் கூறியதாவது,

இலங்கையின் தண்டனைச் சட்டக் கோவைக்கமைவாகவோ அல்லது வேறு சட்டங்களுக்கமையவோ தண்டனை வழங்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் சந்தேகத்தில் தடுத்து வைக்ககப்பட்டுள்ளவர்களிடையே அரசியல் குற்றச்சாட்டுகளில் சிறை வைக்கப்பட்டுள்ள அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ள எவரும் தற்போது இலங்கை சிறைச்சாலைகளில் இல்லை என்பதனை இந்த சபைக்கு கூறிக்கொள்கின்றேன் என்றார்.

இதேவேளை இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் தொடர்பாகவும் சாணக்கியன் கேள்வியெழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த பிரதமர், நாடுபூராகவும் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் தொடர்பாக தேசியப் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அது தொடர்பாக பதிலளிக்க முடியாது என்று பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

 

 

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 02/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை