ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

ஜனாதிபதியிடம் கெஹலிய தெரிவிப்பு

ஊடகவியலாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இது தொடர்பான  கோரிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் நடைபெற்ற கொவிட்-19 தடுப்பு ஜனாதிபதி செயலணியில் வைத்து விடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார். இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கும் கொவிஷீல்ட் எஷ்ட்ரா செனெகா தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

 

Thu, 02/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை