நாங்கள் தான் ஓரளவிற்கு தமிழ்த் தேசியத்தை வாழ வைத்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள் இல்லையேல் தமிழ்த் தேசியம் எப்போதோ அழிந்திருக்கும் என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் யாழில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மாநாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக மேலும் கூறுகையில்,
இன்றைக்கு ஓரளவிற்கு தமிழ்த் தேசியத்தை வாழ வைப்பவர்கள் நாங்கள் தான். எங்களைப் போன்ற சிலர் எந்த அரசாங்கம் வந்தாலும் அதனுடன் இணைந்து மக்களுடைய தேவைப்பாடுகளை உணர்ந்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை கூட்டி வருகின்றோம். ஆனால் சிலர் அரசியல் பிரச்சினைகளை மட்டுமே பேசி வருகின்றனர்.
மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறுகின்றனர். நாங்கள் இல்லை என்றால் எப்போதோ தமிழ்த் தேசியம் அழிந்திருக்கும். ஏதோவொரு விதத்தில் நாங்கள் தான் தமிழ்த் தேசியத்தை வாழ வைத்துக்கொண்டிருக்கிறோம் என்பது பெருமையளிக்கின்றது என்றார்.
சாவகச்சேரி விசேட நிருபர்
from tkn